மலேசியாவிலிருந்து 2 கிலோ தங்கம் கடத்தி வந்த வாலிபர் சிக்கினார்

ஏர்போர்ட், மே 7:   திருச்சி ஏர்போர்ட்டில் புதுகை வாலிபர் 2 கிலோ தங்கத்தை தகடு வடிவில் செய்து கடத்தி வந்ததை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் (34) என்பவர் கொண்டு வந்த டிவி ஸ்டாண்டில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 95 கிராம் தங்கத்தை தகடு வடிவில் செய்து மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: