நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கோவை, மே 7: கோவை அருகே நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.நாமக்கல்லை  சேர்ந்தவர் மோகனசந்திரன். இவரது மகன் ராம்கிஷோர் (19).  பெரிநாயக்கன்பாளையம் அருகே ஒரு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு  பயின்று வந்தார். இந்நிலையில் இவர் நண்பர்களுடன் நேற்றுமுன் தினம் மேட்டுப்பாளையம்  தேக்கம்பட்டி பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான  பகுதிக்கு சென்றபோது ராம்கிஷோர் நீரில் மூழ்கி இறந்தார். காரமடை போலீசார்  வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: