கடவூர், மே7: காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து கல்லூரி முதல்வர் தேன்மொழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி 2019-20ம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. நேரடியாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு வருகின்ற மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு வருகின்ற மே மாதம் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.