கல்பகனூரில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

ஆத்தூர், மே 3:  ஆத்தூர் கல்பகனூர் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன் கூத்தாண்டவர், பார்வதி கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற்றது. விழாவில் ஆத்தூர்,  கல்பகனூர், கொத்தாம்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், செல்லியம்மன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும், பக்தர்களுக்கு நீர் தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Related Stories: