துறையூர், மே 3: துறையூர் அருகே 100 நாள் வேலை பணியிலிருந்த பெண் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். துறையூர் அருகில் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் நேற்று 100 நாள் வேலை நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் அட்டையை கொடுத்து வேலைக்கு தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இதில் சிங்களாந்தபுரம் புதிய வீட்டு குடியிருப்பு வாரியத்தில் வசித்து வரும் மோகன் மனைவி காந்திமதி(55) என்பவர் நேற்று வேலைக்கு அட்டையை கொடுத்துவிட்டு கருப்புக்கோயில் அருகில் வாரியில் வேலை செய்து வந்தார். அப்போது திடீரென காந்திமதி நெஞ்சு வலிப்பதாக கூறினார். பின்னர் உடனே அதே இடத்தில் மயக்கம் அடைந்தார்.