கோபால்பட்டி, மே 3: நத்தம் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நத்தம் அருகே கதிர்நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விழா 29ம் தேதியன்று காலையில் யாகசாலை அமைக்கப்பட்டு பகவத் அனுக்வீரு, மகா சங்கல்பம் முதல்கால பூஜையுடன் தொடங்கியது. 31ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. 1ம் தேதி மூன்றாம்கால பூஜை நடந்தது. நேற்று நான்காம் கால பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.