கொடைக்கானல், மே 3: கொடைக்கானலில் ஏரிப்பகுதியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் ஏரி பகுதியில் தனியார் பங்களிப்புடன் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ள கழிப்பறைகள், நடைபாதைகள், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஏரியை சுற்றி நடந்து செல்லக்கூடிய நடைபாதை பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக இருபுறமும் தடுப்பு அமைப்புகள் அமைக்கும் பணியை கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் ஆய்வு செய்தார்.