பந்தலூர், மே 1: நீலகிரி மாவட்ட எல்பிஎப் தொழிற்சங்க துணைப்பொதுச்செயலாளர் மாடசாமி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகாவீர் பிலாண்டேசன் மற்றும் அதன் அருகில் செயல் பட்டுவரும் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ நிறுவனங்களில் விவசாயிகள், ஏராளமான பொதுமக்களும் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த பல வருடங்களாக தார் சாலை சீரமைக்காமல் இருப்பதால் தார்சாலை முழுவதும் பழுதடைந்துள்ளது.