ஊட்டி, மே 1: ஊட்டி நகரில் உள்ள அனைத்து நகராட்சி பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால், கால்நடைகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஊட்டி நகராட்சியிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஆங்லேயர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் தற்போது பராமரிக்ககாமல் இருந்தது. இதனால் பூங்காக்கள் அனைத்தும் முட்புதர்களால் சூழ்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கு முன் ஊட்டி நகராட்சி தலைவராக இருந்த ராஜேந்திரனின் முயற்சியால், மீண்டும் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் பொலிவு பெற்றன.