நெட்டப்பாக்கம், மே 1: நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(26). டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்துள்ளார். இது குறித்து அப்பெண்ணின் அக்கா கணவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு தெரியவரவே, தமிழரசனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதலை தமிழரசன் கைவிடாமல் ெதாடர்ந்து வந்துள்ளார். இதனால் தமிழரசன் மீது ராமு ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று தமிழரசன் தனது கள்ளக்காதலியுடன் கரியமாணிக்கம் - மடுகரை சாலையையொட்டி உள்ள ஒரு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து ராமுவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் உடனே அங்கு சென்றார். ராமுவை கண்டவுடன், அவரது மைத்தினி அங்கிருந்து சென்றுவிட்டார்.