துறையூர், மே 1: துறையூரை அடுத்த அம்மம்பாளையம் கிராமத்தில் பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வட்ட சட்டப்பணிகள் குழு, ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துறையயூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான சரண் தலைமையேற்று நடத்தி வைத்தார். முகாமில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் செல்லத்துரை மற்றும் வக்கீல் செல்வராஜ் ஆகியோர் மக்களுக்கு எளிதில் சட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் கருத்துகளை வழங்கினர்.