சேந்தமங்கலம், மே 1: கொல்லிமலை அருகே எஸ்எஸ்எல்சி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை குண்டூர்நாடு மருதம்குளம்பட்டியை சேர்ந்தவர் தங்கையன். விவசாயியான இவரது 2வது மகன் சரத்(15). இவர, செம்மேடு உண்டு உறைவிடப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்தான். அரசு பொதுத்தேர்வெழுதிய நிலையில், நேற்று முன்தினம் முடிவுகள் வெளியானது. தனது மதிப்பெண்னை தெரிந்து கொள்ள செம்மேட்டில் உள்ள பள்ளிக்கு சென்ற சரத், 420 மதிப்பெண்கள் வந்திருப்பதை பார்த்து மனமுடைந்தான். 480 மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 420 மதிப்பெண் வந்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி மன வேதனையடைந்துள்ளான்.