காவிரிநகர் 4வது கிராஸ் சாலை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், மே. 1: பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் உள்ள காவிரி நகர் 4வது கிராஸ் சாலையை செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் செல்லும் சாலையோரம் காவிரி நகர்ப்பகுதிகள் உள்ளன. இதில், காவிரி நகர் 4வது கிராஸ் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்த சாலை சிதிலமடைந்து ஆண்டுகள் பல கடந்தும் இதுநாள் வரை எந்தவித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.இதன் காரணமாக, இந்த பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து இந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவிரி நகர் 4வது கிராஸ் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இந்த சாலையை சீரமைத்து புதிதாக தார்ச்சாலையாக மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: