புதுச்சேரி, ஏப். 30: தமிழகம், புதுச்சேரியில் பானி புயல் தாக்கம் இருக்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் கடலில் மகிழ்ச்சியாக குளித்தனர்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதனிடையே புயலையொட்டி கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் புதுவையில் கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை கடல் சற்று கொந்தளிப்பாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்காத வண்ணம் போலீசார் காவலுக்கு இருந்தனர். இருந்தபோதும் ஒருசிலர் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை போலீசாரும், பாதுகாப்பு குழுவினரும் எச்சரித்து வெளியேற்றினர்.