தா.பேட்டை, ஏப்.30: துறையூர் அடுத்த பொன்னுசங்கம் பட்டியில் மாரியம்மன் கோயில் அருகே உள்ள நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியினர் முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துறையூர் தாலுகா பொன்னுரங்கம்பட்டியை சேர்ந்த அகில பாரத இந்து மகாசபா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முசிறி ஆர்டிஓ அலுவலகத்திற்கு சுமார் 30க்கும் மேற்பட்டோர் வந்தனர். அப்போது துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே உள்ள இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருகிறார். அதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ ரவிச்சந்திரன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.