திருவண்ணாமலை, ஏப்.28: திருவண்ணாமலையில் காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. ஒருகிலோ பீன்ஸ் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திருவண்ணாமலையில் தோட்டப்பயிர்களின் சாகுபடி குறைந்த அளவே நடைபெறுகிறது. கத்திரி போன்ற ஒரு சில காய்கறிகள் மட்டும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பயிரிடப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன.பெரும்பாலான காய்கறிகள் தினசரி வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் திருவண்ணாமலைக்கு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் காய்கறிகளின் விலைகள் கிடு கிடு வென உயர்ந்துள்ளது. ₹20க்கு விற்பனை செய்யப்பட்ட அவரை தற்போது ₹40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ₹40க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ பீன்ஸ் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரட் பீட்ருட் ஒருகிலோ 40க்கும், பீர்க்கங்காய் ₹50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.