பொள்ளாச்சி, ஏப்.26: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் சம்பாரக நெல் அறுவடை நடக்கிறது. இதனால், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில், தென்னை மற்றும் மானாவாரி சாகுபடி அதிகமாக இருந்தாலும், ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டாரத்தில், பல ஏக்கரில் நெல் சாகுபடி தொடர்ந்துள்ளது. ஆண்டிற்கு இரண்டு முறை சாகுபடி செய்யும் நெல், குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்பட்டு வெளி மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். இருப்பினும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற வேதனை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரியில் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில் இரண்டாம் போக சம்பா ரக நெல் சாகுபடி துவங்கியது. அவை, கடந்த மாதத்தில் நல்ல விளைச்சலடைந்து அறுவடைக்கு தயாரானது.