கரூர், ஏப். 26: கரூர் மக்கள் பாதை அருகே பிற வாகனங்களுக்கு இடையூறாக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து மார்க்கெட், மாரியம்மன் கோயில், பழைய திண்டுக்கல் சாலை, நகராட்சி அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மக்கள் பாதையின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். எனவே, மக்கள் பாதைச் சாலை எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது.