திண்டிவனம், ஏப். 25: திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(32) கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளைக்கு கூலிதொழில் செய்ய சென்றுள்ளார். அப்போது மதியம் 2 மணி அளவில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. இதனிடையே தீ வேகமாக பரவியதில் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.