முதலிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஒரு கோடி மோசடி

திருப்பூர், ஏப்.25:திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இணைப்பதிவாளர் கூறினார்.  திருப்பூர் ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சியில் மாணிக்காபுரம் தொடக்க ளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் செயலாளராக தமிழ்செல்வி பதவி வகித்து வந்தார். இச்சங்கத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் நடந்துள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்கள் இணை பதிவாளருக்கு புகார் அளித்தனர். இதைதொடர்ந்து கடந்தாண்டு தணிக்கையின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டறிந்தனர். மேலும், தணிக்கைக்கு பின் பணம் கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்தது.  இது குறித்து விசாரணை நடத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிரபுவிடம் விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது.  தமிழ்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அனைத்து பதிவேடுகளையும் கைபற்றி விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: