பிளஸ்2 பொதுத்தேர்வில் குற்றாலம் பள்ளி 100% தேர்ச்சி

நெல்லை, ஏப். 25: பிளஸ்2 பொதுத்தேர்வில் குற்றாலம் செய்யது மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 பொதுத்தேர்வை 55 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். 28 மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் பத்ஹூர் ரப்பானி, பள்ளி செயலர் நயினாமுகம்மது, பள்ளி முதல்வர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

Related Stories: