திருச்சுழி, ஏப். 25: பார்த்திபனூரிலிருந்து நரிக்குடிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நரிக்குடி மற்றும் மறையூர், மாயலேரி, புத்தனேந்தல், டி.வேலாங்குடி, ஆண்டியேந்தல், எஸ்.வல்லக்குளம், சேதுராயனேந்தல் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பல்வேறு வேலை நிமத்தமாக, தேவைகளுக்காக மக்கள் பார்த்திபனூர் செல்கின்றனர். அங்கிருந்து மதுரை, மானாமதுரை, சிவங்ககை, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் வேலை முடிந்து இரவில் வீடு திரும்ப பெரிதும் சிரமப்படுகின்றனர்.