திருப்புத்தூர், ஏப்.25: திருப்புத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் நேற்று 85ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சொரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் தென்மாபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் நேற்று 85ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெகு விமர்சியாக நடந்தது. இதையொட்டி திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூமாயி அம்மனுக்கு பால்குடம், மது எடுத்தும், பூச்சொரிந்தும் வழிபாடு செய்தனர். மேலும் நகரின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக மேல தாளத்துடன், வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ பூமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு நகரின் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.