பரமக்குடி, ஏப்.25: பார்த்திபனூர் அருகே பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிவாக பேசி வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிவாக பேசி வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி நேற்று கமுதி-பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்த கிராமத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.