கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி 555 லிட்டர் பால் அபிஷேகம்

கிருஷ்ணகிரி, ஏப்.24:  கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது விநாயகருக்கு 555 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயாகர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சுவாமியை வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு மகா தீபாராதனையுடன் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.  

Related Stories: