மஞ்சூர், ஏப்.24: தனமந்தோரை சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மஞ்சூர் தாய்சோலா அருகே உள்ளது தனமந்தோரை. இப்பகுதியில் 50கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தனமந்தோரை பகுதியினர் மருத்துவமனை உள்ளிட்ட எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் தொலைதூரமுள்ள மஞ்சூர் மற்றும் ஊட்டி, குன்னுார் போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது. இந்நிலையில் தனமந்தோரை கிராமத்திற்கு செல்லும் சுமார் 3 கி.மீ., தூரமுள்ள சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.