ஊட்டி, ஏப். 24: மஞ்சூரில் இருந்து கோவைக்கு தினசரி காலை 6.45 மணிக்கு செல்லும் அரசு பஸ் அடிக்கடி பழுதாவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் காரமடை, கோவை போன்ற சமவெளி பகுதிகளுக்கு கெத்தை, வெள்ளிங்காடு செல்லும் சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாைல வழியாக ஊட்டி கிளையில் இருந்து இரண்டு அரசு பஸ்களும், மேட்டுபாளையம் கிளையில் இருந்து ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது. கெத்தை முதல் வெள்ளியங்காடு வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ்கள் பழுதடைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கீழ்குந்தா கிராமத்தில் இருந்து கோவைக்கு தினசரி காலை 6.45 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் நேற்று காலை ஓணிக்கண்டி பகுதி அருகே செல்லும் போது பேன் பெல்ட் அறுந்து பழுதாகி வழியிலேயே நின்று விட்டது. இதனால் கோைவ செல்ல கூடிய பயணிகள் கடும் அவதியடைந்தனர்.