செங்கம், ஏப்.24: செங்கம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் செங்கம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் தாழையூத்து கிராம ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படும் கிணறும் வறண்டுள்ளது. இந்நிலையில், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 44 கிராமங்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், சாத்தனூர் அணைக்கு அருகே உள்ள தாழையூத்து கிராமத்திற்கு சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கவில்லை.