திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் செத்து மிதப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும்(குளம்), 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் உள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த குளங்களில் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. மேலும், இரண்டு குளங்களை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்போது மட்டும் சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் குளத்துக்குள் இறங்குவது வழக்கம்.இந்நிலையில், சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவற்றை முறையாக பராமரிக்காததாலும், கும்பாபிஷேகத்தின்போது தீர்த்தங்களில் உள்ள நீரை முழுமையாக வெளிேயற்றி, மறுசீரமைப்பு செய்ய தவறியதாலும், தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து, பச்சை நிறத்தில் கழிவுநீர்போல மாறிவிட்டது.