நாமக்கல், ஏப்.23: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தபால் மற்றும் இணையதளம் வழியாக புகார் செய்யலாம் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பது: இந்தியாவில், பாலியல் குற்றங்களில் இருந்து, பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்கு குறைவான, அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்க போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்தில், ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல் மற்றும் ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் ஆகியவை சட்டப்படி குற்றம்.