சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

ஜெயங்கொண்டம், ஏப். 23: சங்கடஹர சதுர்த்தியையொட்டி கங்ைககொண்ட சோழபுரம் விநாயகர் கோயிலில் முன்னிட்டு கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ேகாவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: