காங்கயம் அருகே பழுதான கேட் வால்வுகளை மாற்ற வலியுறுத்தல்

காங்கயம்,ஏப்.22:  காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்டது அரசம்பாளையம். இப்பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதில் போர்வெல் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குடிநீர் தொட்டியில் இரண்டு குழாய்கள் வைக்கப்பட்டு அதில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த இரண்டு குழாய்களும் பழுதாகி அதன் கேட்வால்வுகள் உடைந்து போன நிலையில் தண்ணீர் வெளியேறாமல் இருக்க மரக்கட்டையை சொருகி வைத்துள்ளனர். இதனால் தண்ணீர் பிடிக்கும் போது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த தண்ணீர் தொட்டியின் பழுதடைந்த குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: