நாகர்கோவில், ஏப். 22: நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. நாகர்கோவில், ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரிக்கு சுகாதார ஆய்வாளர் படிப்புக்கான அனுமதி தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து 2017-2018, 2018-2019 கல்வியாண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் கல்லூரி துணைத்தலைவர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் செய்தார். ரோஜாவனம் கல்லூரி குறித்து அதன் துணைத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் அல்லது அறிவியல் பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும் சுகாதார ஆய்வாளர் படிப்பில் சேர தகுதியுடையவர்கள். சிறந்த நிர்வாகம், அனுபவமிக்க ஆசிரியர்கள், ஆய்வகங்கள், தங்கும் விடுதி, கேன்டீன் மற்றும் பஸ் வசதிகளுடன் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நேரடியாக அழைத்து சென்று பயிற்சி வழங்கப்படுகிறது.