கம்பத்தில் பள்ளி மாணவி தற்கொலை

கம்பம், ஏப்.22:கம்பத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் 1 வது வார்டு விவேகாநந்தர் தெருவை  சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மகள் பூஜா(14), இவர் கம்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி  9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் திடீரென வீட்டின் மேல்மாடி முற்றத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: