நெல்லை, ஏப். 22: நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தேசமாணிக்கபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி என்ற விஜய சண்முகசுந்தரம் (35). இவர் முன்னீர்பள்ளம், பத்தமடை அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் அவ்வப்போது நடக்கும் மணல் திருட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தார். இதனால் போலீசார் மணல் கடத்தலை தடுப்பதோடு, அதில் ஈடுபடுவர்களையும் கைது செய்து வந்தனர். இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் அரசு உயர் அதிகாரிகளிடம் விஜி மீண்டும் புகார் மனு அளித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மணல் கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் விஜய சண்முகசுந்தரம் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.