பெயிண்டர் தற்கொலை

வில்லியனூர், ஏப். 22:  வில்லியனூர் அருகே சிவராந்தகம் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). பெயிண்டர். இவரது மனைவி கவுசல்யா. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ஆறுமுகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் ஆறுமுகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவுசல்யா தூங்க சென்று விட்டார். நேற்று அதிகாலை கவுசல்யா எழுந்து பார்த்தபோது, வீட்டில் கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: