திருவண்ணாமலை, ஏப்.21: திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் மற்றும் போலீசார் அடங்கிய 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய 2 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களில் உள்ள இருட்டறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.