வாழப்பாடி, ஏப்.18: சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவின் விளாம்பட்டி காப்புகாடு செங்காட்டூர் வனக்காவல் எல்லையில் சின்ன வேலாம்பட்டி அருகே கோவேரி காட்டில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் ஞானராஜ் உத்தரவின்பேரில் வனவர்கள் குமரேசன், சிவகுமார், வனக்காப்பாளர்கள் மாணிக்கம், ஜெயக்குமார், ஜெயராமன், சின்னத்தம்பி, முனீஸ்வரன் மற்றும் தோட்டக் காவலர் முத்தையன் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.