வடமதுரை அருகே சிறுமி மர்மச்சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

திண்டுக்கல், ஏப். 18: வடமதுரை அருகே மர்மமான முறையில் இறந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல்லில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடமதுரை அருகே ஜி.குரும்பப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம்- லட்சுமி தம்பதி மகள் கலைவாணி (12). அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்று விட பள்ளி விடுமுறை என்பதால் கலைவாணி மட்டும் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் கலைவாணி வாயில் மின்வயரை கடித்தவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று கலைவாணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். இவர்களிடம் வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினு சமதானம் ஆகவில்லை. தொடர்ந்து மாலை வரை பேச்சுவார்த்தை நீடித்தது. கலைவாணியின் உறவினர்கள் கூறுகையில், ‘வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இந்த கொலையாளிகளை எங்களுக்கு தெரியும். போலீசார் நன்கு விசாரிக்காமல் தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்ய கூடாது. உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம்’ என்றனர். போலீசார் கூறுகையில், ‘மாணவியின் பிரதே பரிசோதனை அறிக்கை வந்தவுடன், என்ன நடந்தது என்பது தெரிந்து விடும். இதற்கு பின்பு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். மீண்டும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விடமாட்டோம்’ என்றனர்.

Related Stories: