திருப்பூர், ஏப். 17: தமிழக கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்திற்காக மீன் பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மொத்த சந்தைக்கு மீன்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் மொத்த மீன் மார்க்கெட் செயல்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமாரி, ராமேஸ்வரம், கொச்சி ஆகிய கடலோர பகுதிகளிலிருந்து தினமும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் 70 டன் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஆண்டுக்கு ஒரு முறை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த 45 நாட்களில் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகள், துடுப்பு படகுகள், கட்டுமரங்களை பராமரிப்பு செய்து, புதுப்பித்துக்கொள்கின்றனர்.