கந்தர்வகோட்டை, ஏப்.17: கந்தர்வகோட்டையில் வாக்காளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை அளிப்பதற்கு பயமின்றி இருக்க வலியுறுத்தி சிறப்பு போலிசாருடன் உள்ளூர் போலீசாரும் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.திருச்சி மக்களவை தொகுதியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி இடம் பெற்றுள்ளது. நாளை மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 237 வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 20க்கும் மேற்பட்ட வாக்குசாவடி மையங்கள் பதட்டமான வாக்குசாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.