புதுச்சேரி, ஏப். 17: புதுவை, தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அமமுக பிரமுகரை ரூ.1 லட்சம் பணத்துடன் பறக்கும் படை பிடித்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. புதுவையில் நாளை (18ம்தேதி) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதில் தேர்தல் பறக்கும் படை தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதனிடையே இசிஆரில் தேர்தல் பறக்கும் படை நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்துபணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர் ரூ.1 லட்சம் வரை பணம் வைத்திருந்தது தெரியவந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.