விருதுநகர், ஏப்.16: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் ராணுவத்தினர் இன்று காலை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.18 வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் பணியாற்ற இதுவரை விருப்பம் தெரிவித்த, விருப்பம் தெரிவிக்காத முன்னாள் படைவீரர்கள் சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்.16(இன்று) காலை 7.30 மணிக்கு ஆஜராக வேண்டும்.