குளத்தூர், ஏப்.14: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் நேற்று குளத்தூரையடுத்த வேம்பார் பஸ்நிலையத்திலிருந்து பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து வேம்பார் வடக்கு, வேம்பார் தெற்கு, பச்சையாபுரம், குஞ்சையாபுரம், முத்தையாபுரம், பெரியசாமிபுரம், மேல்மாந்தை, இ.வேலாயுதபுரம், கலைஞானபுரம், துலுக்கன்குளம், கீழவைப்பார், சிப்பிகுளம், சூரங்குடி, சூரங்குடி சிலோன்காலனி, சக்கனாபுரம், வீரகாஞ்சிபுரம், தத்தனேரி, கன்னிமார்கூட்டம், சங்கரலிங்கபுரம், ரெட்டடியாபட்டி, அரியநாயகிபுரம், சோலைமலையான்பட்டி, கீழவிளாத்திகுளம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மலர்ந்ததும் இப்பகுதியில் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் கிடக்கும் வேம்பார் ஆறு தூர்வாரப்படும், அடிப்படைத் தேவையான குடிநீர் பிரச்சினை சீரமைக்கப்படும், மீன்களை பதப்படுத்துவதற்கு குளிர்சாதன கிடங்கு, பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பனை ஓலை உற்பத்தி பொருட்களுக்கு மானியக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.