அருப்புக்கோட்டை, ஏப். 11: அருப்புக்கோட்டையில் முத்துமாரியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து விடிய, விடிய நேர்த்திக்கடன்
செலுத்தினர். அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8ம் நாள் திருவிழாவாக பொங்கல் விழாவும், 9ம் நாள் திருவிழாவாக அக்கினிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 21, 51, 101 அக்னிச்சட்டிகள் எடுத்து ஊர்வலமாக வந்து விடிய, விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரங்கண் பானை, பாதம், கை உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர்.