ரூ.4 கோடி மோசடியால் பாதித்தவர்கள் புகார் தரலாம் சிபிசிஐடி அறிவிப்பு

மதுரை, ஏப்.11: மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி வரை மோசடி நடந்தது குறித்த புகார்களை சிபிசிஐடி அலுவலகத்தில் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த சத்தியசீலன்(30), ஆனையூரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், ஜான்பிரிட்டோ உள்பட 4 பேர் சேர்ந்து மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பலருக்கு போலி உத்தரவை வழங்கி ரூ.4 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பான புகார்களின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்து இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால், ‘சிபிசிஐடி அலுவலகம், சின்னசொக்கிகுளம், காமராஜர் முதல்தெரு, மதுரை’ என்ற முகவரியில் புகார் கொடுக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: