புதுச்சேரி, ஏப். 9: புதுவை, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நெடுஞ்செழியன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோயில் வீதி, அய்யனார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்துடன் அவர் வீடுவீடாக சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.