புதுச்சேரி, ஏப். 9: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ் சுப்ரமணியன் நேற்று தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திராநகர் தொகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு என்பது மக்களை சுகாதார சீரழிவுக்கு கொண்டு செல்வதாக உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதை புதுச்சேரியிலும் பின்பற்றி கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தடை செய்வதாக ஆட்சியாளர்கள் அறிவித்தனர். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை.