பேராவூரணி, ஏப். 8: பேராவூரணி அருகே நேற்று மாலை 2 கூரை வீடுகள் எரிந்து சம்பலானது. பேராவூரணி அருகே உள்ளது களத்தூர் கிராமம் கவரத்தெருவை சேர்ந்த விவசாய ெதாழிலாளி ரவிச்சந்திரன். இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்படித்து எரிந்தது. இதில் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதே தெருவில் வசிப்பவர் முத்துராமலிங்கம். இவரது வீடும் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல அணைத்தனர். தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.