ராஜாக்கமங்கலம் அருகே வீட்டு கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

ஈத்தாமொழி, ஏப். 8:  ராஜாக்கமங்கலம் அருகே வீட்டு கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் தம்மத்து கோணத்தை சேர்ந்தவர் குமரேசன்(43). இவர் ெவளியூர் செல்ல வேண்டி இருந்ததால் தனது மனைவி, குழந்தைகளை மனைவியின் ஊரான கொல்லமாவடிக்கு அனுப்பி விட்டுள்ளார். பின்னர் மனைவியின் நகைகளை வீட்டு பீரோவில் வைத்து பூட்டி விட்டு மதுரைக்கு சென்றுள்ளார். கடந்த 5ம் தேதி அதிகாலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குமரேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து குமரேசன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். கை ரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: